வட மாகாணத்திலிருந்து 2,000 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்களாக இணைக்கப்படவுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய அரச சேவையை மீள்கட்டமைத்தல் திட்டத்தின் கீழ், குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய இவ்வருடத்தில் வட மாகாணத்திலிருந்து 200 உப பொலிஸ் பரிசோதகர்கள், 1,400 பொலிஸ் கான்ஸ்டபிள்கள், 400 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட 2,000 பேர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைக்கப்படவுள்ளனர்.
குறித்த ஆட்சேர்ப்பின் மூலம், சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையை மேலும் உயர் தரத்திற்கு கொண்டு செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றவர்கள், வட மாகாணத்தில் காணப்படுகின்ற பயிற்சி நிலையங்களில் பயிற்றப்பட்டு, பயிற்சியின் பின்னர் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment