Ads (728x90)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்று பிற்பகல் வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். வெலிக்கடை சிறைசாலையில் சிறைக் கைதிகளுடன் உரையாடிய ஜனாதிபதி அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

சிறைக் கைதிகளின் எண்ணிக்கைக்கு போதுமான இடத்தைப் பார்க்கிலும் மும்மடங்கு எண்ணிக்கையானவர்கள் சிறையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பிழையான தகவல்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு அதிக காலம் செல்வதாகவும், இதன் காரணமாக தமக்கு நீண்டகாலம் சிறையில் இருக்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தற்போதைய நிலைமை குறித்து கண்டறிவதற்கு குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget