Ads (728x90)

எதிர்வரும் காலங்களில் போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் தலைவர் மலரவன் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

மக்களை ஒருங்கிணைப்பதுடன் எதிர்வரும் தேர்தல் காலங்களில் நாம் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாக கலந்துரையாடி இருக்கிறோம். விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் அரசியல் வேலைத்திட்டமும், நகர்வுகளும் மக்களை உள்ளடக்கியதாக அவர்களின் ஆலோசனைகளை பெறும் வகையில் தான் பயணித்து கொண்டிருக்கிறோம்.

எதிர்காலத்தில் நாம் எப்படி பயணிப்போம் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான புதிய கூட்டணியிடம் இருந்து எமக்கு எந்தவித அழைப்புகளும் வரவில்லை.

அது தொடர்பாக நாங்களும் எந்த விருப்பத்தையும் தெரிவிக்கவில்லை. மக்களின் நலன்சார்ந்த வேலைதிட்டமொன்று தமிழ் நிலப்பரப்பில் நிறைவேறுமானால் எதிர்வரும் காலங்களில் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஆலோசித்து முடிவெடுப்போம்.

நாம் எந்த ஒரு தனிநபரையும் தாக்கக்கூடிய வகையிலான பேச்சினை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் எதிர்வரும் காலங்களில் போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது என கூறியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget