நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தமிழர் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் தொடர்பிலான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ளும் என தாம் உறுதியாக நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச இருதரப்பு உறவு தொடர்பாக நேற்று தில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கர் ஆகியோரை ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியா-இலங்கைக்கு இடையிலான வா்த்தகம், பாதுகாப்பு, கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன.
செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாவது,
இந்தியா, இலங்கைப் பகுதிகளில் பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதற்கு இரு நாடுகளும் தக்க பதிலடி அளித்து வருகிறது. இனிவரும் காலங்களில் பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து செயலாற்றும்.
இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதாரத் திட்டங்கள், வர்த்தக மற்றும் மூலதன ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இருநாட்டு மக்களையும் இணைக்கும் விதமாக சுற்றுலா வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இலங்கையில் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகியவை இந்தியாவின் நலனுக்காகவும், ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் நலனுக்காகவும் முக்கியமானவை. இலங்கையின் வளர்ச்சியில் இந்தியா ஒரு நம்பகமான பங்காளியாக இருந்து வருவதாகவும், அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான பயணத்தில் நாட்டிற்கு தொடர்ந்து உதவுவதாகவும் அவர் கூறினார்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தமிழர் பிரச்சினையில், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை குறித்த எதிர்பார்ப்புகளை இலங்கை அரசாங்கம் உணரும் என்று தான் நம்புவதாக மோடி கூறியுள்ளார்.
மீனவர்கள் பிரச்சினை குறித்து குறிப்பிடுகையில், அதை கையாள்வதில் இரு தரப்பினரும் மனிதாபிமான அணுகுமுறையை பின்பற்ற முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment