கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளின்படி, நாடு முழுவதும், சோதனை முயற்சியாக, இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 'மக்கள் ஊரடங்கு' நடத்தப்படுகிறது.தமிழகத்தில், மக்கள் ஊரடங்கு காலை 7 மணிக்கு துவங்கியது. இந்த ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் அரசு பஸ்கள் ஓடாது என தமிழக அரசு அறிவித்தது.
கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்கள் அடைக்கப்பட்டிருக்கும் என அதன் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இதன்படி, அரசு பஸ்கள் இயங்கவில்லை. ரயில்களும் இயக்கப்படவில்லை. ஓட்டல்கள், மார்க்கெட்கள், கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
ஆட்டோக்களும் இயங்கவில்லை. பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, மக்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. சாலைகளில் ஒரு சிலரே நடமாடுகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
Post a Comment