இலங்கைக்கு என்று இறைமை இருக்கின்றது. இதனை மீறி உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடவே முடியாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்கள் தொடர்பான எமது நிலைப்பாடுகளில் எந்த மாற்றமும் கிடையாது. இதை ஐ.நாவும், சர்வதேச நாடுகளும் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு சம்பந்தமாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் போராடி கொடிய பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த பாதுகாப்புப் படையினருக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்கள் ஐ.நா. தீர்மானங்களில் உள்ளடக்கப்பட்டு இருப்பதனால்தான் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து நாம் வெளியேறியுள்ளோம் என்பதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
உள்நாட்டுக்குள் பொறிமுறை ஒன்றை உருவாக்கித்தான் பொறுப்புக்கூறல் கடமையை எம்மால் செய்ய முடியும் என்பதையும், சர்வதேசத்தின் பொறிமுறையை நாம் ஒருபோதும் ஏற்கவே மாட்டோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment