பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரியும் வடமாகாணத்தில் உள்ள அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து நேற்று காலை மன்னாரில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
நேற்று காலை 10.30 மணியளவில் நகரசபைக்கு முன்பாக ஆரம்பித்த இந்தக் கவனயீர்ப்பு பேரணி மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது. பின்னர், மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன் குறித்த பேரணியில் சென்றவர்கள் ஒன்று சேர்ந்தனர்.
பேரணியில் கலந்து கொண்ட அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக இலங்கையில் பெண்கள் பல வழிகளில் பாதிக்கப்படுவதுடன் மிகவும் கடினமான வகையில் சமூகத்தில் தள்ளப்படுகின்றார்கள். குறிப்பாக, யுத்தத்தின் பின்னரான சூழலில், பெண்கள் அரசியல் ரீதியாகவும் சமுக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.
இதனால் குடும்பத்தைத் தலைமை தாங்கும் பெண்கள் பல இன்னல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். இந்த நிலையில் சிறையில் நீண்ட காலம் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அரசியல் கைதிகளின் உறவுகள் கண்ணீர் மல்க தமது கோரிக்கையை முன்வைத்ததோடு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் அரசியல் கைதிகளான தமது உறவுகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய ஜனாதிபதி, பிரதமர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment