ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பண்டாரவளை நகரத்தில் இருந்து 8 நபர்களும் ஹப்புதளை பகுதியில் இருந்து ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், மற்றுமொரு நபர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தருணத்தில் வீதியில் நடந்துச் சென்ற குற்றத்திற்காக தங்கல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தியாவசிய தேவைகள் இன்றி இவ்வாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் வீதிகளில் பயணிப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment