கொரோனா வைரசு தொற்று தடுப்புக்கான ஊரடங்கு சட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு முயற்சிப்பார்களாயின் அவ்வாறானோர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஊரடங்குச்சட்டம் அமுல் நடத்தப்பட்ட கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 19 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சட்டத்தை மீறுவோர் நாளை முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்றும் கூறினார்.
ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு முயற்சிப்பார்களாயின் அவ்வாறானோர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஊரடங்குச்சட்டம் அமுல் நடத்தப்பட்ட கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 19 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சட்டத்தை மீறுவோர் நாளை முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்றும் கூறினார்.
Post a Comment