தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக சீனாவும், அந்நாட்டின் பிரபல மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களும் மேற்கத்திய நாடுகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரசை விரைவாக கண்டறியும் கருவிகள் மற்றும் தரமான முகக் கவசங்கள் தங்களிடம் விற்பனைக்கு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து, கொரோனா வைரசை கண்டறியும் பரிசோதனை கருவி களையும், முகக் கவசங்களையும் பல லட்சக்கணக்கில் இங்கிலாந்து, ஸ்பெயின், செக்.குடியரசு, சுலோவாக்கியா உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் சீனாவிடம் இருந்து வாங்கிக் குவித்தன. ஸ்பெயின் அவசர தேவையாக 6.40 லட்சம் கருவிகளை வாங்க ஆர்டர் செய்தது.
தற்போது, இந்த கருவிகள் அனைத்துமே தரமற்றவை என இறக்குமதி செய்த நாடுகள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளன.
ஸ்பெயின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "சீனாவின் பிரபல பயோடெக்னாலஜி நிறுவனம் ஒன்றிடம் இருந்து முதல்கட்டமாக பெறப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள் 30 சதவீத ஆளவிற்கே முடிவைத் தந்தன. ஆனால் 80 சதவீதம் வரை துல்லிய முடிவுகள் கிடைத்தால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த இயலும்" என்று தெரிவித்தனர்.
செக்.குடியரசு மருத்துவ அதிகாரிகள் அதிருப்தியுடன் பேசும்போது, "தினமும் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்கிறோம். என்றாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5 நாட்கள் ஆனவர்களையே இதில் கண்டறிய முடிகிறது" என்றனர்.
சுலோவாக்கியா பிரதமர் இகோர் மோடோவிச் எல்லோருக்கும் ஒருபடி மேலே போய், "உள்ளூர் இடைத்தரகர் ஒருவர் மூலம் சீனாவில் இருந்து 12 லட்சம் பரிசோதனை கருவிகளை வாங்கினோம். ஒன்றிலுமே உருப்படியான முடிவு கிடைக்கவில்லை. இவற்றையெல்லாம் கொண்டுபோய் தனுபே ஆற்றில்தான் வீசவேண்டும்" என்று ஆவேசப்பட்டார்.
இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை உயர் அதிகாரி ராபர்ட் பெஸ்டோன், 'சீன மருத்துவ கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகளின் முடிவுகள் முற்றிலும் தெளிவற்று காணப்படுவதாக கருத்து தெரிவித்ததாக ஐ.டி.வி. நியூஸ் கூறுகிறது.
ஆனால் தங்கள் நாட்டு மருத்துவ கருவிகள் பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குற்றம்சாட்டுவதை சீனா மறுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கொரோனா வைரசை கண்டறியும் பரிசோதனை கருவி களையும், முகக் கவசங்களையும் பல லட்சக்கணக்கில் இங்கிலாந்து, ஸ்பெயின், செக்.குடியரசு, சுலோவாக்கியா உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் சீனாவிடம் இருந்து வாங்கிக் குவித்தன. ஸ்பெயின் அவசர தேவையாக 6.40 லட்சம் கருவிகளை வாங்க ஆர்டர் செய்தது.
தற்போது, இந்த கருவிகள் அனைத்துமே தரமற்றவை என இறக்குமதி செய்த நாடுகள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளன.
ஸ்பெயின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "சீனாவின் பிரபல பயோடெக்னாலஜி நிறுவனம் ஒன்றிடம் இருந்து முதல்கட்டமாக பெறப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள் 30 சதவீத ஆளவிற்கே முடிவைத் தந்தன. ஆனால் 80 சதவீதம் வரை துல்லிய முடிவுகள் கிடைத்தால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த இயலும்" என்று தெரிவித்தனர்.
செக்.குடியரசு மருத்துவ அதிகாரிகள் அதிருப்தியுடன் பேசும்போது, "தினமும் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்கிறோம். என்றாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5 நாட்கள் ஆனவர்களையே இதில் கண்டறிய முடிகிறது" என்றனர்.
சுலோவாக்கியா பிரதமர் இகோர் மோடோவிச் எல்லோருக்கும் ஒருபடி மேலே போய், "உள்ளூர் இடைத்தரகர் ஒருவர் மூலம் சீனாவில் இருந்து 12 லட்சம் பரிசோதனை கருவிகளை வாங்கினோம். ஒன்றிலுமே உருப்படியான முடிவு கிடைக்கவில்லை. இவற்றையெல்லாம் கொண்டுபோய் தனுபே ஆற்றில்தான் வீசவேண்டும்" என்று ஆவேசப்பட்டார்.
இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை உயர் அதிகாரி ராபர்ட் பெஸ்டோன், 'சீன மருத்துவ கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகளின் முடிவுகள் முற்றிலும் தெளிவற்று காணப்படுவதாக கருத்து தெரிவித்ததாக ஐ.டி.வி. நியூஸ் கூறுகிறது.
ஆனால் தங்கள் நாட்டு மருத்துவ கருவிகள் பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குற்றம்சாட்டுவதை சீனா மறுத்துள்ளது.

Post a Comment