பொதுத் தேர்தலின் பின்னர் பட்டதாரிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ களுத்துறை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் 15 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.
ஆனால் சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து நாளாந்தம் தகவல்கள் வருகின்றன. எனவே ஊழல், மோசடிகளை ஒழித்து வினைத்திறனான அரச சேவை தாபிக்கப்படும்.
இறக்குமதி வர்த்தக முறைமைக்குப் பதிலாக உள்நாட்டு உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருளாதார செயற்பாடுகளுக்கு அரசாங்கம் வழி செய்துள்ளது. விவசாயம் மற்றும் உற்பத்திகளில் ஈடுபட்டு அதன்மூலம் அதிகபட்ச பலனை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
நவீன தொழிநுட்பத்தின் மூலம் விவசாய பொருளாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும். அதற்காக விவசாயப் பயிர்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி, உள்நாட்டு அறுவடைகளுக்கு அதிக விலையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment