Ads (728x90)

கொரோனாவால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேச் தெரிவித்துள்ளார்.

அவ்வகையில் இலங்கைக்கு வர விருப்பமுள்ள வெளிநாட்டில் தங்கியுள்ள இலங்கையர்கள் இன்று முதல் மீண்டும் அழைத்து வரப்படுவார்கள் என தெரிவித்த அவர், முதல் தொகுதியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டுபாய் மற்றும் அபுதாபியிலுள்ள சுமார் 550 பேர்  இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாகவும் கூறினார்.

மேலும் இலங்கை விமான நிலையத்தை வெளிநாட்டினருக்காக திறப்பதற்கான ஒரு குறிப்பிட்ட திகதியை தற்போது அறிவிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் அண்மையில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது இலங்கையில் நிலைமை சீராகியதை அடுத்து மீண்டும் இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget