கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கடந்த இரு இருந்து மேலும் 252 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 196 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் குறித்த நிலையத்தில் மேலும் 56 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்ப்பதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,350 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1,979 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது 360 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளை பார்வையிட வந்த அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 119 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த தரப்பினரை இராணுவத்தின் பங்களிப்புடன் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment