Ads (728x90)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பாக எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிடமும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

சமூக இடைவெளியை கடைபிடித்து அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், தேர்தல் கூட்டங்கள் நடத்தும் இடங்களை சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய அமைக்குமாறும், கூட்டத்திற்கு வரும் மக்கள் முகக் கவசம் அணிவதனை கட்டாயமாக்குமாறும், மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களை முடிந்தளவு மட்டுப்படுத்துமாறும் பிரதமர் வேட்பாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நானும் ஜனாதிபதியும் கலந்துக் கொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget