எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பௌத்த துறவிகள் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவே தம்மரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆட்சியாளர்களுக்கு அர்த்தமுள்ள தர்ம உபதேசங்களை வழங்குவதே பௌத்த துறவிகளின் கடமையே அன்றி அரச நிர்வாகத்தில் சம்பந்தப்படுவதற்காக பாராளுமன்றத்திற்குச் செல்வதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுத் தேர்தலில் பௌத்த துறவி வேட்பாளர்களாகவோ தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவோ பெயரிட வேண்டாம் என மாநாயக்க தேரர்கள் அனைத்து அரசியலில் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனால் சில பௌத்த துறவிகள் இணைந்து தனியான கட்சியை ஆரம்பித்துத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களின் இந்த நடவடிக்கையானது மாநாயக்கர் தேரர்களின் நிலைப்பாட்டை மதிக்காத தன்னிச்சையான செயல்.
எனவே பௌத்த துறவி எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக வலவாஹெங்குனுவெவே தம்மரத்ன தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment