கொழும்பு, ஜிந்துபிட்டி வீதியில் கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவ்வீதி மூடப்பட்டது. சுகாதார அமைச்சு இதனை சமூகபரவலில்லை என தெரிவித்துள்ளதுடன் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வருகை தந்த கப்பலில் பணிபுரிந்த மாலுமி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக்கி இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
14 நாட்களின் பின் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இவர் கொரோனா தொற்று இல்லையென உறுதிபடுத்தப்பட்டதையடுத்து இவரின் வீட்டில் மேலும் 14 நாட்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்தக் காலப்பகுதியில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
அதனையடுத்து கொழும்பு , ஜிந்துப்பிட்டி வீதி முழுமையாக முடக்கப்பட்டு 29 குடும்பங்களை சேர்ந்த 143 பேர் சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment