நாடாளுமன்ற தேர்தலுக்காக நான்கு நாட்களுக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.
அந்த வகையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4, 5, 6 மற்றும் 7ஆம் திகதி வரை பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து பாடசாலைகளும் 11, 12, 13ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த 27ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் அனைத்து தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment