Ads (728x90)

பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 03 நாள் செயலமர்வு ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 பாராளுமன்ற சிறப்புரிமைகள், நிலையியற்கட்டளைகள் மற்றும் உறுப்பினர்களின் பொறுப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதே இதன் நோக்கம் என்று பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல்த்தவல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டவுடன் இந்த பயற்சிக்கான செயலமர்வு இடம்பெறவுள்ளது. இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளவர்களுள் 60 க்கும் மேற்பட்டோர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாகவர். இதேபோன்று தேசிய பட்டியலிலும் பல புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget