28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுகளைக் கொண்ட அமைச்சரவை நாளை மறுதினம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுகளின் விடயங்கள் மற்றும் பொறுப்புகள் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வகிக்கப்படும் அமைச்சுக்களும் இதில் உள்ளடங்கின்றன.
அமைச்சரவையை அமைக்கும்போது தேசிய முன்னுரிமை, கொள்கை, பொறுப்புகள் மற்றும் பணிகள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சுக்குமுரிய விரிவான பணிகளுக்கேற்ப முன்னுரிமையை வழங்குதல் மற்றும் குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தலை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அமைச்சுக் கட்டமைப்பை வகுக்கும்போது தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பின் மூலம் கிராமிய, விவசாய அபிவிருத்தி மற்றும் கல்வித்துறையின் பல்வேறு துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment