ஒன்பதாவது பாராளுமன்றத்தின் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.
இக்குழுவில் நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, டக்ளஸ் தேவானந்தா, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், விஜித்த ஹேரத், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய 12 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த தெரிவுக் குழுவின் ஊடாக பாராளுமன்றத்தின் ஏனைய செயற்குழுக்கள் நியமிக்கப்படுவதுடன், பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் முக்கிய தீர்மானங்களின் போதும் இந்த செயற்குழு கூட்டப்படும்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்தத் தெரிவுக்குழு முதல் தடவையாகக் கூடியது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment