தனியார் கட்டடங்களில் நடத்தி செல்லப்படும் அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களை அரச கட்டடங்களில் நடத்தி செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன் மூலம் வருடத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாயை மீதப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கமைய புதிய அரசாங்கத்தின் அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டடங்களில் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் விவசாய அமைச்சிற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட தனியார் கட்டடத்திலிருந்து விவசாய அமைச்சை விவசாய மாளிகைக்கு கொண்டு செல்வற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதேபோல தனியார் கட்டடங்களில் இயங்கி வருகின்ற அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களை அரச கட்டடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment