Ads (728x90)

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இவ்வருடத்தின் எதிர்வரும் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமகால அரசாங்கத்தின் இந்த இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நேற்று முன்தினம் ஆரம்பமான நிலையில் நேற்று கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு ரூபா 1,900 பில்லியன் அரச செலவினங்களுக்காக இந்த கணக்கறிக்கை பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget