Ads (728x90)


நாரஹேன்பிட வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

சேவை பெறுநர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய ஜனாதிபதி நேற்று பிற்பகல் இவ்வலுவலகத்திற்கு சென்றார். சேவை ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக பல தடவைகள் வருகை தந்தபோதும் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை என்பதுடன், போதுமான அளவு பணிக்குழாமினர் இல்லை எனக் கூறி அச்சேவை நிறைவேற்றப்படவில்லை என முறைப்பாட்டாளர் தெரிவித்திருந்தார்.

அலுவலகத்தை கண்காணித்த ஜனாதிபதி, போதுமானளவு ஊழியர்கள் இருப்பதை கண்டறிந்தார்.

அங்கு சேவை பெற்றுக்கொள்வதற்கு வருகை தந்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்ததைக் கண்ட ஜனாதிபதி, அவரது தேவை மற்றும் விபரங்களை கேட்டறிந்ததோடு அதனை நிறைவேற்றிக் கொடுக்குமாறும் பணித்துள்ளார்.

மக்கள் தேவைகளை வினைத்திறனாகவும் குறைவின்றியும் நிறைவேற்றுவது அரச ஊழியர்களின் அடிப்படை பொறுப்பாகுமென ஜனாதிபதி பணிக்குழாமினரிடம் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget