வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் சங்கம் ஆகியன நேற்று ஆரம்பித்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் தொடர்கின்றது.
அரச தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவே வேலையற்ற பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தொலைபேசி ஊரையாடலின் போது உரிய தீர்வு கிடைக்காமையால், நேற்று காலை கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய பட்டதாரிகள் அங்கிருந்து பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்லும் போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கடந்த மார்ச் மாதம் தமக்கு புதிய வேலைகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும், புதிய அரசாங்கத்தின் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களின் நியமனங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது எதிர்ப்பில் ஈடுபட்டவர்களில் பிரதிநிதிகள் 08 பேருக்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
எனினும் குறித்த அறிவிப்பை எழுத்துமூலம் தரவேண்டுமென கோரிய அவர்கள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து மீண்டும் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக வந்து தங்களது எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்தனர்.

Post a Comment