Ads (728x90)


ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் கிராம உத்தியோகத்தர்களின் பணிகள் தொடர்பில் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு புதிய சுற்றுநிருபம் ஒன்றை வௌியிட்டுள்ளது.

இதனடிப்படையில் கிராம உத்தியோகத்தர்கள் தமது ஓய்வு நாளைத் தவிர ஏனைய 06 நாட்களும் 24 மணித்தியாலங்கள் தமது பிரிவில் கடமைகளை முன்னெடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என புதிய சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரையும், சனிக்கிழமைகளில் காலை 8.30 முதல் நண்பகல் 12.30 வரையிலும் கிராம உத்தியோகத்தர்கள் அலுவலகங்களில் இருக்க வேண்டும் என குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமைகளில் பிரதேச செயலகங்களின் பணிகளில் ஈடுபட வேண்டும் எனவு, மீதமுள்ள மூன்று நாட்களில் ஓர் தினத்தை ஓய்வு தினமாகப் பெற்று, ஏனைய இரண்டு நாட்களில் கள உத்தியோகத்தில் ஈடுபட வேண்டும் எனவும் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget