Ads (728x90)


பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கு மடிக்கணனியை கொள்வனவு செய்வதற்கு கடன் வசதியை பெற்றுக் கொடுக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அரச வங்கிகளின் மூலம் இந்த கடன் வசதியை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

சலுகை கடன் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் ரூபா மாணவர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளதுடன், பட்டப்படிப்பை நிறைவு செய்ததன் பின்னர் கடனை மீள செலுத்தலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஒன்லைன் கல்வி முறையை தொடர்வதற்காக இந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிட்டா லியனகே கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியெய்தி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆங்கில பாடநெறிகள் ஒன்லைன் ஊடாக கற்பிக்கப்படவுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget