கல்வி பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் 05 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மினுவாங்கொட கல்வி வலயத்தில் உள்ள மூன்று தேர்வு மையங்களில் அவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இவர்களில் இரண்டு மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் தேர்வு எழுதினர்.
மற்றைய மூன்று மாணவர்களும் தொற்று உண்மையை மறைத்து சில நாட்கள் தேர்வு எழுதியுள்ளளமை கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாணவர்கள் அனைவரும் கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு மீதமுள்ள தேர்வில் தோற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment