Ads (728x90)


யாழ்.மாவட்டத்தில் தற்போது கோரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்றது. எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என மாவட்டச் செயலாளர் க. மகேசன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளது. அதனடிப்படையில் 323 குடும்பங்களைச் சேர்ந்த 595 நபர்கள் மட்டுமே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று கோரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனர் மேலதிக சிகிச்சைக்காக இரணவில கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குரிய பி.சி.ஆர் பரிசோதனை நிறைவு பெறும்வரை கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு பகுதியானது தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிலரது பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவந்ததும் தற்காலிக முடக்கம் விரைவில் நீக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி தற்போது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அக்கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையமாக மாத்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. அங்கு தனிமைப்படுத்தலுக்குட்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார்கள். எனவே குறித்த விடயம் தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget