மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக இன்று 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேலியகொடை மீன் சந்தை தொடர்பால் 496 பேருக்கும், மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு காரணமாக 40 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையத்தில் 48 பேருக்கும், பேருவளை துறைமுகத்தில் 20 பேருக்கும் என இவ்வாறு தொற்று செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3,426 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு காரணமாக 309 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.
அதாவது பேலியகொடை மீன் சந்தை தொடர்பால் 182 பேருக்கும், மினுவாங்கொடை தொடர்பு காரணமாக பல்வேறு இடங்களில் 75 பேருக்கும், தனிமைப்படுத்தல் மையத்தில் இருவர் என 77 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதியானது.

Post a Comment