இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்தி வந்த மூவர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் மறு அறிவித்தல் வரை அனலைதீவு முற்றாக முடக்கப்படுவதாக யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் தொிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நேற்று காலை அனலைதீவு பகுதியைச் சேர்ந்த மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கடற்படையினர் கைது செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட நபர்கள் அனலைதீவு பிரதேசத்தில் நடமாடியதாக கருதப்படுவதன் காரணமாக அனலைதீவு பிரதேசம் சுகாதாரப் பிரிவினால் முடக்கப்பட்டுள்ளது.
அனலைதீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியேறாதவாறும், வேறுபகுதியைச் சேர்ந்தவர்கள் உட்செல்லாதவாறும் தடை விதிக்கப்பட்டு அப்பிரதேசம் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் காரைநகர் பிரதேசத்தில் நடமாடி யதன் காரணமாக காரைநகர் பிரதேசத்தில் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மஞ்சள் கடத்தலில் தொடர்புபட்ட வகையிலே
கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். அவர்கள் பயணம் செய்த இடங்கள் ஆராயப்பட்டு வருகின்றது. அதேநேரம் தற்காலிகமாக தீவகத்துக்கான போக்குவரத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment