Ads (728x90)


இந்தியாவின் அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ இராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்த கல் இலங்கையின் நுவரெலியாவில் உள்ள சீதாஎலிய சீதையம்மன் கோவிலின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை பூஜிக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையின் நுவரெலியாவில் அமைந்துள்ள சீதாஎலிய சீதையம்மன் ஆலயம் இராமாயணத்தில் போற்றப்படும் ஓர் ஆலயமாக வர்ணிக்கப்படுகிறது.


அந்த ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டபோது குறித்த கல் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை காலமும் அந்த கல் பூஜிக்கப்பட்டு வந்துள்ளது. 

இக்கல்லை இந்தியாவின் அயோத்தியில் கட்டப்படும் ஶ்ரீ இராமபிரானின் கோயிலுக்கான அடிக்கற்களில் ஒன்றாக இதனை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கல் சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திலும், ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் பூஜையிலே வைக்கப்பட்டு பரிபாலன சபையின் மூலமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து இந்தியாவிற்கு அனுப்ப ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget