அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் போடப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் சந்தேகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அனலைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு நபர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு தொற்று இல்லை என சுகாதாரப்பிரிவினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட அரச அதிபர் க. மகேசன் அறிவித்துள்ளார்.

Post a Comment