பல்கலைக்கழகங்களிற்கு இந்த வருடத்தில் மேலதிக 10,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த வருடத்தில் பல்கலைக்கழகங்களிற்கு உள்வாங்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 30,000 ஆகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபிட்சமிக்க நாடு என்ற தொலைநோக்கின் கீழ் இம்முறை 41,500 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதிக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இதற்கமைவாக இம்முறை மருத்துவ பீடத்திற்கு 371 மாணவர்களும், பொறியியல் பீடத்திற்கு 405 மாணவர்களும், சட்ட பீடத்திற்கு 126 மாணவர்களும், உயிரியல் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் தொழில்நுட்ப பீடத்திற்கு 350 மாணவர்களும் என்ற அடிப்படையில் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
முகாமைத்துவ பீடத்திற்கு 900 மாணவர்களும், கலைப்பீடத்திற்கு 815 மாணவர்களும், விவசாயம், விஞ்ஞானம் உள்ளிட்ட ஏனைய பட்டப்படிப்பு கற்கைநெறிகளுக்காக 6,000 மாணவர்களும் இம்முறை இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலான மேல் முறையீடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ (www.ugc.ac.lk) இணையத்தளத்தின் ஊடாக அல்லது appeals@ugc.ac.lk என்ற மின்னஞ்சல் முலம் சமர்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment