Ads (728x90)


இன்று முதல் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து மாதாந்த கிளினிக்கில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான மருந்துகள் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு போதுமான மருந்துகளை வீடுகளுக்குக் கொண்டு சென்று வழங்க இலங்கை அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த கிளினிக் நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்க, நோயாளியின் வசிப்பிட முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை வழங்க வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கிளினிக் கொப்பியில் சரியான முகவரி வழங்கப்படாவிட்டால், நீங்கள் மருந்து பெறும் மருத்துவமனைக்கு அழைத்து தகவலைப் புதுப்பிக்கவேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வைத்தியசாலை ஊழியர்கள் உங்கள் மருந்து தொகுப்பை தயார் செய்து உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணுடன் தபால் நிலையத்திற்கு வழங்குவார்கள். அவை உங்கள் வீட்டிற்கு தபால் ஊழியர் மூலம் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget