Ads (728x90)

இலங்கையில் கடந்த கால துன்புறுத்தல்களுக்கான பொறுப்புக்கூறல் இன்மை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி ஜே.பிளிங்கன் தெரிவித்துள்ளார். 

மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை ஊக்கப்படுத்த அமெரிக்கா மீண்டும் பேரவையில் இணைவதாகவும் அவர் மனித உரிமைகள் பேரவையில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலக நாடுகளின் மனித உரிமைகளை ஊக்கப்படுத்துவதிலும், நிலையான அமைதியை ஏற்படுத்துவதிலும் அமெரிக்கா நீண்ட ஈடுபாட்டுடன் செயற்பட்டுள்ளது. அந்த வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் இணைந்து அந்த பணிகளை ஊக்கப்படுத்த அமெரிக்க ஆர்வத்துடன் உள்ளது. 

பல நாடுகளினதும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அடிப்படை தன்மையை வலியுறுத்தி நிற்கின்றோம். மேலும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படை தன்மையை வலியுறுத்துவதோடு மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டிய விடயங்களுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget