தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி சென். செபஸ்டியன் தேவாலயத்திற்கு முன்னால் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை மாற்றுவதற்காகவா ஜனாதிபதி புதிய குழுவை நியமித்துள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கையொன்றை நான் கோரியுள்ளேன் என தெரிவித்த அவர் ஆணைக்குழுவின் முழு அறிக்கையையும் பகிரங்கப்படுத்த வேண்டும். குறித்த அறிக்கையில் இருப்பதை மறைக்க வேண்டிய தேவையில்லை. அரசாங்கம் எவ்வித அச்சமுமின்றி மக்களுக்கு அந்த ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் எமக்கு நம்பிக்கையில்லை. இந்த ஆணைக்குழு அறிக்கை ஐந்து உயர்ந்த அறிவார்ந்த நபர்களால் தயாரிக்கப்பட்டது. O/L கூட சித்தியடையாத ஒரு குழு இதைப்பற்றி முடிவு செய்ய நாங்கள் எவ்வாறு அனுமதிக்க முடியும் என்று கர்தினால் மெல்க்கம் ரஞ்சித் ஆண்டகை ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தார்.
Post a Comment