யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவமானது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியே. யாழ். மாநகர முதல்வர் தமது கடமையின்போது ஏதாவது பிழை செய்திருந்தால் அது குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடைமுறைகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதைவிடுத்து அவரைப் பயங்கரவாதி போலச் சித்திரித்து, நாட்டில் அரசாங்கத்தினர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இன்னும் அறியப்படாது உள்ளனர். புதிதாக அச்சங்களை ஏற்படுவதைத் தவிர்த்து ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment