தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நாடு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது புதிய வழிகாட்டல்கள் அறிவிக்கப்பட்டன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தனவினால் வழங்கப்பட்ட வழிகாட்டகளுக்கு அமைய இது வெளியிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 01 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை அனுமதிக்கப்பட்ட பொது நடவடிக்கைகளில் எவ்வாறு பொதுமக்கள் ஈடுபடுவது என்பது குறித்த வழிகாட்டல்கள் இதில் உள்ளடங்கியுள்ளது.
Post a Comment