Ads (728x90)


நாட்டிலுள்ள 18 மற்றும் 19 வயதுடைய மாணவர்களுக்கு அவரவர் பாடசாலைகளிலும், குறித்த வயது பிரிவைச் சேர்ந்த பாடசாலை செல்லாதோருக்கு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கான வேலைத்திட்டம் பாடசாலை மட்டத்திலும், பிரதேச சுகாதார பிரிவு மட்டத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் 15 - 19 வயதுக்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையில் சுமார் 10,000 சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget