Ads (728x90)

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக தமது பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக  சங்கத்தலைவர் அசேல தெரிவித்துள்ளார். கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை மாவின் விலையில் ஏற்பட்ட பெரும் விலை அதிகரிப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினால் கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் பாண் இறாத்தலின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget