Ads (728x90)

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயன்படுத்தப்படும் கொவிட் தடுப்பூசியின் எந்த வகையினதும் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்கள் ஒரு மாதத்தின் பின்னர் மூன்றாவது டோஸ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர்  இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இரண்டு புதிய சுற்றறிக்கைகளில் இன்று கையொப்பமிட்டுள்ளதாவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்று பூஸ்டர் ஷாட் பெறுவதற்கான பல்வேறு நோய்கள் உட்பட தகுதி அளவுகோல்களை விபரிக்கின்றது. மற்றையது பாடசாலையொன்றில் கொவிட் தொற்றுக்கு ஒருவர் அடையாளம் காணப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பானது ஆகும் எனவும் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget