கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சார்பில் இந்த மனுக்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
முன்னர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ள இராணுவத்தின் 512 பிரிகேட் தலைமையகத்துக்கு முன்பாகவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழலிலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய எல்லையிலும் மாவீரர் நாளை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் 120ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும் இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்றும் இதனைத் தடை செய்யுமாறும் பொலிஸார் கோரியிருந்தனர்.
இந்த மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்த யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிபதி வி.ரி. சிவலிங்கம் அவர்கள் நாளை 21 ஆம் திகதி தொடக்கம் வரும் 28 ஆம் திகதி வரை ஒரு வாரத்துக்கு இந்நிகழ்வை நடாத்த தடை உத்தரவு பிறப்பித்தார்.
Post a Comment