அரசதுறையின் தொலைத்தொடர்பு செலவீனங்கள் 25 வீதத்தினால் குறைப்பு.
அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 65 வயதாக அதிகரிப்பு.
அரச நிறுவனங்களிற்கான புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு இரண்டு வருடங்களிற்கு தடை.
ஓய்வூதிய பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக அரசாங்க ஊழியர்களிற்கு புதிய சம்பள கட்டமைப்பு.
ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாத அரச உத்தியோகத்தர்களுக்கு உரிய திகதியில் சம்பள உயர்வு வழங்கப்படும்.
அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு 5 லீற்றரால் குறைக்கப்படும். தொலைபேசிக் கட்டணம் 20 சதவீதம் குறைக்கப்படும்.
ஒரு தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசாங்க ஊழியர்கள் வேறு தொழிற்சங்கங்களில் அங்கத்துவம் பெறுவது கட்டுப்படுத்தப்படும்.
நாடு முழுவதுமுள்ள 10,105 பாடசாலைகளுக்குத் தேவையான அதிவேக இணைய வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கொவிட் தொற்று காரணமாக நாடு மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க 700 மில்லியன் ரூபாவும், தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க ,1500 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டும்.
சிறைச்சாலைகளில் தங்க வைக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளின் உடல் நலனை பேணுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
பொதுமக்கள் பாதுகாப்புக்கென பொலிஸ் திணைக்களத்துக்கு 500 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அவர்களுடைய தொகுதிகளில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு 05 மில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீடு.
பெருந்தோட்ட மக்களுக்கு புதிய குடியிருப்புளை நிர்மாணிப்பதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
வீதி அபிவிருத்திக்கென 20 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
சிகரெட் விலை ஐந்துரூபாவால் அதிகரிப்பு.
அரசியல்ரீதியில் பழிவாங்கப்பட்டவர்களிற்காக 100 மில்லியன் ஒதுக்கீடு.
அதிபர்-ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு முப்பதாயிரம் மில்லியன் ஒதுக்கீடு.
மதுபானங்களுக்கு வரியை அதிகரிப்பதனால் 25 விகித வருமானத்தை பெற்றுக்கொள்ள தீர்மானம்
காணாமல்போனவர்களது குடும்பங்களுக்கு 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.
Post a Comment