Ads (728x90)

2022 ஜனவரி முதலாம் திகதி முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் கட்டண மீற்றர் பொருத்தப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் கட்டண மீற்றர் இல்லாமல் பயணிகள் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கட்டண மீற்றர் பொருத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கப்படும்.

2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முச்சக்கரவண்டித் தொழிலுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டிகளுக்கான ஒழுங்குமுறை அதிகார சபையொன்றும் நிறுவப்படவுள்ளது.

முச்சக்கரவண்டி நடத்துவோர் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக இவ்வாறான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget