Ads (728x90)

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 58,000 பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு மாதாந்தம் 41,000 ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர்  தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்று காரணமாக பட்டதாரிகளுக்கு வழங்கப்பட இருந்த தொழில் பயிற்சிக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget