Ads (728x90)

அறியாமை இருள் அகற்றி மனதை ஒளிரச் செய்யும் ஞானஒளி ஏற்றலையே தீபாவளித் திருநாள் குறிக்கின்றது. உலகளாவிய இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்புமிக்கதொன்றாக தீபாவளித் திருநாள் கருதப்படுகின்றது. 

இந்துக்களின் ஆன்மீக வழிபாடாகவும், பாரம்பரிய கலாச்சாரப் பெருவிழாவாகவும் காணப்படும் தீபாவளித் திருநாள் மூலம் வாழ்வின் துன்பங்கள்  நீங்கி இன்பங்களை அடைந்து கொள்வதே நோக்கமாகும். இந்தத் தீபத்திருநாள், அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகும். 

தாமதித்தாலும் வாய்மையே இறுதியில் வெல்லும் என்பதையும், காரிருள் மறைந்து இன்பங்கள் பெருகி நலமும் வளமும் பெருகும் என்பதே இந்துக்களின் நம்பிக்கையாகும். சுற்றாடலுடன் ஒன்றுபட்டுள்ள பருவமாற்றங்களோடு, பண்டைய காலந்தொட்டு மானிடர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஆன்மீகப் பரிமாறல்களை மிகவும் உற்சாகமாகவும், பக்தியுடனும் கொண்டாடுகின்ற தீபாவளி நன்நாள், சிறுவர் முதல் பெரியோர்வரை அனைவருக்கும் மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் ஏற்படுத்துகின்றது.

தீபாவளித் திருநாளில் பிரபஞ்சத்துக்கு பிரவேசமாகும் சுப சக்தியால் உலக மக்கள் யாவருக்கும் மகிழ்ச்சி, சௌபாக்கியம், செல்வம் மற்றும் தெய்வ அருள் கிடைக்கவேண்டும் என்று இந்தத் தீபத்திருநாளில் பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget