இவ்வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டமாக 142.16 கோடி இந்திய ரூபா செலவில் 3,510 புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன. இதனால் தமிழகத்தில் மறுவாழ்வு முகாம்களில் வாழும் 19,046 இலங்கை தமிழர்களின் குடும்பத்தினர் பயன்பெறவுள்ளனர். மேலும் 30 கோடி ரூபா பெறுமதியிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தமிழகத்தின் 106 முகாம்களில் வசிக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு வீதி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகள் கிடைக்கவுள்ளன.
Post a Comment