Ads (728x90)

2021 கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

அதன்படி நாளையுடன் முடிவடைய இருந்த விண்ணப்ப முடிவு திகதியானது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பல்கலைக்கழக அனுமதியை இழந்த க.பொ.த உயர்தர மாணவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மேற்படி தீர்மானமானது மேற்கொள்ளப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget