Ads (728x90)

பாகிஸ்தானின் சியல்கோட் சம்பவத்தில் உயிரிழந்த பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 01 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கப்படும் என சியல்கோட் வர்த்தக சமூகம் அறிவித்துள்ளது.

மேலும் உயிரிழந்த பிரியந்த குமாரவின் மனைவிக்கு அவரது கணவர் பெற்று வந்த சம்பளத்தை வாழ்நாள் முழுவதும் வழங்குவதற்கும் சியல்கோட் வர்த்தக சமூகம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ருவிற்றர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊழியர் நலன்புரி நிதியத்திலிருந்து ரூபா 25 இலட்சம் வழங்கவும் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில்  அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget