Ads (728x90)

தேவையற்ற பயணங்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை பதில் சுகாதார சேவைகள் பணப்பாளர் நாயகம் எஸ்.ஸ்ரீதரன் வெளியிட்டுள்ளார்.

இப்புதிய நடைமுறைகள் இன்று டிசெம்பர் 01 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமண நிகழ்வுகள், மரண சடங்குகள் மற்றும் கூட்டங்கள் நடாத்த 150 பேருக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் ஆசனங்களின் அளவில் மூன்றில் ஒரு பங்கு அழைப்பாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

திருமண மண்டபங்களில் இருக்கைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இருக்கைகளுக்கே விருந்தினர்களையே அழைக்க முடியும். எனினும் அதிக பட்சம் 200 விருந்தினர்களே பங்குபற்றலாம். 

திறந்த வெளியாயின் 250 பேர் அனுமதிக்கப்படுவர். இறுதிச் சடங்குகளில் ஆகக் கூடியது 20 பேரே ஒரே நேரத்தில் பங்கேற்க முடியும். உணவகங்களில் அவற்றின் திறனில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்படாமல் அதிகபட்சம் 100 பேர் உள்ளிருந்து உணவருந்த அனுமதிக்கப்படுவர். திறந்த வெளியாயின் 150 பேர் அனுமதிக்கப்படுவர். 

பாடசாலைகள் கல்வி அமைச்சின் வழிகாட்டலிலும், உயர்கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் வழிகாட்டலிலும் இயங்க முடியும்.

நீதிமன்ற நடவடிக்கைகள் நீதிச்சேவை ஆணைக்குழுவின் வழிகாட்டலில் கோவிட்-19 கட்டுப்பாடுகளைப் பின்பற்றி முன்னெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget